புதிய அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்: ஜோசப் ஸ்டாலின்
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் ஆரம்பம் நன்றாக உள்ளதுடன், அவை தவறினால் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் விசேட நேர்காணலில் கலந்துகொண்டு புதிய அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இந்த புதிய அரசாங்கம் மக்களால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் ஆகும். எனவே புதிய அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை செயற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் அரசாங்கமாகவே காணப்பட்டது. ராஜபக்சர்கள் தங்களை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களில் அடக்குமுறையை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
எனவே புதிய அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam