ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாகும் பரந்த கூட்டணி : ரணில் விக்ரமசிங்கவிற்கு பெருகும் ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பரந்த கூட்டணியொன்று உருவாக்கப்பட உள்ளதாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சி ஒன்றின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், அதற்கமைவாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்படவுள்ள கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இதனை முன்வைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆதரவை வழங்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு
இதற்கமைய, ஜனாதிபதித் தேர்தலில் நிமல் லான்சா, சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
மேலும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வடக்கில் சி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுக்கள் இதுவரை தமது ஆதரவினை அறிவிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்காக மேலும் பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
இதன் காரணமாக எதிர்வரும் பொதுத்தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் இந்நாட்டில் அதிக கூட்டணிகளை கொண்ட தேர்தலாக மாறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri