வெளியாகியுள்ள பெறுபேறுகள்! அதி உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வெளியானது
தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 8,300 மாணவர்கள் 3ஏ அதி உயர் சித்திகளைப் பெற்றுள்ளனர்.
பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள்
இவற்றுள், 7,477 பாடசாலை பரீட்சார்த்திகளும், 823 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 11 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்துப் பாடங்களிலும் சித்திப் பெறாத மாணவர்களின் எண்ணிக்கை 30,898 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள், 19,301 பாடசாலை பரீட்சார்த்திகளும், 11,597 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவர்.
YOU MAY LIKE THIS VIDEO
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri