ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் இருந்து விலகுமாறு கோருவது யதாா்த்தமற்றது: முஸ்லிம் உறுப்பினர் பதில்
ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் இருந்து என்னை விலகுமாறு கோருவது யதாா்த்த அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று கொழும்பு மாநரகசபையின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உறுப்பினர் கலீல் உல் ரஹ்மான் தெரிவித்தார்.
ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் அங்கம் வகிப்பது தொடர்பில் எமது ஊடகம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தகவல் வெளியிட்ட அவர்,
நானும், அரசியல் செயல்பாட்டாளா், ஹசீஸ் நிஸார்தீனும், ஜனாதிபதி செயலணி ஒன்றுக்கு பாிந்துரைக்கப்பட்டமை எமக்கு தொிந்திருந்தது. எனினும் ஞானசார தேரரின் தலைமையிலான செயலணிக்காகவே நாம் உள்வாங்கப்பட்டமை குறித்து முன்னர் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.
எனினும் இந்த செயலணிக்கு யாா் தலைவர் என்ற விடயத்தைக் காட்டிலும் செயலணியின் நோக்கத்தை புாிந்துகொண்டு அதில் தொடா்ந்தும் அங்கம் வகிப்பதா? இல்லையா? என்பது தொடா்பில் முடிவெடுப்போம்.
தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் குா்ஆன் மொழிப்பெயா்ப்பை வைத்துக்கொண்டு ஞானசார தேரா், இறைவனை “சூழ்ச்சியாளா்” என்று கூறுவது தவறு. எனினும் ஞானசார தேரருக்கு, இஸ்லாத்தின் சத்தியத்தை இதுவரை காலமும் முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த புத்திஜீவிகள் எவரும் சுட்டிக்காட்டவில்லை.
அதேநேரம் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அவா் முஸ்லிம்களுக்கு சாா்பான கருத்தை வெளிப்படுத்தியிருந்தாா். எனவே எதிா்வாத அரசியலை தவிா்த்து யதாா்த்த அரசியலுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என்று கலில் உல் ரஹ்மான் கோாியுள்ளாா்.
ஏற்கனவே முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டவா்களான விடுதலைப்புலிகள் மற்றும் சம்பிக்க ரணவக்க உட்பட்டவா்களுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் இணக்க நிலைப்பாட்டில் செயற்படுகின்ற போக்கையே, தாம், ஞானசார தேரரின் விடயத்தில் கொண்டிருப்பதாகவும் கொழும்பு மாநகர சபை உறுப்பினா் கலீல் உல் ரஹ்மான் தொிவித்தாா்.
இதேவேளை இந்த செயலணியில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்ச் சமூகம்
யதாா்த்த நிலையை உணா்ந்து கோருகின்றபோது. அதில் இருந்து விலகுமாறு முஸ்லிம்
சமூகத்தின் சிலா் கோருவதாகவும் கலீல் உல் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளாா்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri