ராஜபக்சாக்களின் நகர்வால் ஆபத்திற்குள் சிக்கியது இலங்கை! கடுமையான எச்சரிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற இலக்கை எட்டுவதற்கு அமைக்கப்பட்ட செயலணியானது நாட்டிற்கு ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
தேசிய பாதுகாப்புக் குறித்து கூக்குரல் இடும் ராஜபக்ச அரசாங்கம் இன்று சீனாவிற்கு அடிபணிந்துள்ளது. சீனாவின் வலுக்கட்டாயத்தினால், திருப்பி அனுப்பட்ட சேதன பசளை கப்பலை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
இராஜாங்க அமைச்சர் சீனத் தூதுவரின் இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது முறையான செயற்பாடல்ல. ராஜபக்ஷ அரசாங்கம் இதனையிட்டு வெட்கமடைய வேண்டும்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயம் கொண்டுவருவதற்கு காரணம், ராஜபக்ஷாக்களின் அரசாங்கத்தில் இருக்கும் ஊழல்வாதிகளையும் திருடர்களையும் காப்பாற்றுவதற்கே. அவர்கள் மீது பல வழக்குகள் இருக்கின்றன. அவற்றினை அகற்றுவதற்கு தான் இந்த நடவடிக்கை.
ஏற்கனவே பல வழக்குகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் அப்படி இருக்க முடியாது. சாதாரண மக்களைத் தான் நீதி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இது நாட்டிற்கு மிகவும் ஆபத்தான நகர்வு. 19 வது திருத்தச் சட்டம் அகற்றப்பட்டு 20 வது திருத்தம் கொண்டுவந்த போதே நாம் எண்ணியிருந்தோம் இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று. கடைசியில் அதுவும் நடந்து விட்டது என்றார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri