சிங்கள அரசுடன் கைக்கோர்த்து தமிழகத்தில் இருப்பவர்களை குழப்பாதீர்கள் - சுமந்திரனுக்கு எச்சரிக்கை
சுமந்திரன் உட்பட ஏனைய இலங்கை அரசியல் சக்திகள் சிங்கள அரசுக்கு சமரசம் வீசும் கையோடு தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு இருப்பவர்களை குழப்பும் வேலையை செய்ய வேண்டாம் என தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் பாரி மைந்தன் தெரிவித்துள்ளார்.
செல்லும் நாடுகள் எல்லாம் உலகத் தமிழர்களால் துரத்தி அடிக்கப்படும் சுமந்திரன், பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை பெரியார் திடலில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாய் தெரிவித்திருந்தார்.
ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் தங்களுக்கு எந்த அழைப்பு இல்லை என்கின்றனர். எனவே பொய்யான செய்திகளை பத்திரிகை செய்தியாக கொடுத்து விட்டு அதே நாளில் சென்னையில் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியுள்ளார்.
எனவே சுமந்திரன் உட்பட ஏனைய இலங்கை அரசியல் சக்திகள் சிங்கள அரசுக்கு சமரசம் வீசும் கையோடு தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு இருப்பவர்களை குழப்பும் வேலையை செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
