மக்களை மோசமாக பாதிக்கக்கூடிய உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு - எம்.ஏ சுமந்திரன்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்பது மிகவும் மோசமாக எமது மக்களை பாதிக்கக்கூடியது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் அதாவது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்பது மிகவும் மோசமாக எமது மக்களை பாதிக்கக்கூடியது. ஏனெனில் அதில் இரண்டு விதமான அபாயங்கள் உண்டு ஒன்று உள்ளூர் வங்கிகள் இதனால் பாதிப்படையலாம் மற்றையது ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி ஆகியவை இந்த உள்நாட்டு கடன் மறு சீரமைப்பின் போது அவற்றினுடைய பெறுமதி வெகுவாக குறைவடைவதற்கான சாத்திய கூறுகள் உண்டு.
ஆகவே மே தினத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த கட்சிகள் ஊழியர்கள் பற்றிய பல விதமான கருத்துக்களை கூறி இருக்கின்றார்கள். ஆகையினால் உள்நாட்டிலே சிறு தொழிலாளர்கள் உழைத்து சேமித்து வைத்துள்ள சிறு தொகையையும் இழக்க கூடிய ஒரு அபாய நிலை இப்போது அவர்களை நெருங்கி உள்ளது.
இது விசேடமாக சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட
உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
