இலங்கை அமைச்சரவைக்குள் பொதுஜன பெரமுன உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் தோல்வி
இலங்கை அமைச்சரவைக்குள் பொதுஜன பெரமுனவை சேர்ந்த மூன்று பேரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் பயனளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் தொடர்பிலேயே இந்த உந்துதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மறுசீரமைப்பு நடவடிக்கை
இருப்பினும், தங்களை விட இளையவர்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றவர்கள், அமைச்சுக்களை கொண்டுள்ளனர் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை அமைந்திருந்தது.
இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் விரிவாக்கம் அல்லது மறுசீரமைப்பு எதுவும்
இல்லை என்று அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.