அமைச்சு பதவிக்காக அரசாங்கத்தை அணுகிய மலையக நாடாளுமன்ற உறுப்பினர்!
ஜனாதிபதி ரணில விக்ரமசிங்கவிற்கு ஜெனிவாவில் நடக்கும் நிகழ்வுகள் மட்டும் கவலைக்குரிய காரணமல்ல, ஒரு வாரத்திற்கு முன்புதான் அவர் நியமித்த 37 ராஜாங்க அமைச்சர்களும் தகவல் கொடுத்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல்
எனினும் ராஜாங்க அமைச்சர்கள் இன்னும் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்கள் அரசிதழில்( வர்த்தமானி) வெளியிடப்படவில்லை என்று அவர்கள் முறையிட்டுள்ளனர்.

தமது அமைச்சுக்களுக்குச் செயலாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மலையகப் நாடளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத் தலைவர் ஒருவரை அணுகி தமக்கான துறைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கும் செயலாளராக ஒரு அதிகாரியை நியமிக்கவும் முயற்சித்தார்.
எனினும் அவரை காத்திருக்குமாறு அரசாங்க தரப்பில் கூறப்பட்டதாக ஆங்கில இதழ்
தெரிவித்துள்ளது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan