மொட்டு கட்சியின் பலம் இன்று நிரூபிக்கப்படும்: சாகர காரியவசம் ஆரூடம்
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பலம் இன்றைய தினம் நிரூபிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாம் பேராளர் மாநாடு இன்றைய தினம்(15.12.2023) நடைபெறவுள்ளது.
பசில் ராஜபக்சவின் தலைமை
இதற்கமைய சுகததாச உள்ளக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமை தாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியை வெற்றியை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டம் இன்றைய மாநாட்டில் வெளிப்படுத்தப்படும் என சாகர காரியவசம் மேலும், தெரிவித்துள்ளார்.
இதன்படி கட்சியின் யாப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri