மன்னாரில் மிகப் பழமையான நீர்த்தாங்கி தகர்த்தப்பட்டது(VIDEO)
மன்னார் - உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்கள் பழமையான பாரிய நீர்த் தாங்கி இன்று (15) காலை 10.30 மணியளவில் இராணுவத்தினரின் உதவியுடன் குண்டு வைத்து தகர்த்தப்பட்டுள்ளது.
சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நீர் விநியோகத்திற்கென துறைமுகங்கள் அதிகார சபையினால் அமைக்கப்பட்ட குறித்த நீர்த்தாங்கியானது பாவனையற்ற நிலையில் முழுமையாக பழுதடைந்து காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த நீர்த்தாங்கியில் காணப்பட்ட பாரிய வெடிப்புகள் அப்பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்ததுடன் அவை உடைந்து விழுந்துகொண்டுமிருந்தன. எனவே பிரதேச மக்கள் நீர்த்தாங்கியை அகற்ற அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அச்சுறுத்தலாக காணப்படும் நீர்த்தாங்கியை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இராணுவத்திடம் உதவி கோரிய நிலையில், மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் உதவியுடன் குறித்த நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இன்று(15) காலை 8.30 மணியளவில் குறித்த பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன், அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பகுதிக்கு வந்ததுடன் உடனடியாக அப்பகுதி மக்களை பாதுகாப்பிற்காக வெளியேற்றினர்.
பின்னர் இராணுவம் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகை தந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் குறித்த நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அதற்கு அமைவாக இராணுவத்தின் பொறியியல் பிரிவின் உதவியுடன் காலை 10.30 மணியளவில் குறித்த நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்த்தப்பட்டது.
குறித்த நீர்த் தாங்கியிலிருந்து அரிய வகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆந்தை நீண்ட நாட்களாக அவ் நீர்த் தாங்கியில் வசித்துவந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த நீர்த்தாங்கி தகர்க்கப்பட்ட போது குறித்த ஆந்தை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
