தேர்தலுக்காக செலவிட்ட பணத்துக்கு யார் பொறுப்பு - பெப்ரல் கேள்வி
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்தால் அதற்காக செலவிடப்பட்ட பணத்துக்கு யார் பொறுப்புக் கூறுவது என்று பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, அதற்கான பிரச்சார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்துவதற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறித்து சுயாதீன தேர்தல் கண்காணிப்புக்குழுவான பெப்ரல் அமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மக்களின் வாக்குரிமை
குடிமக்கள் என்ற வகையில், நமது தலைவர்களால் நாடாளுமன்றத்தில் மக்களின் வாக்குரிமை கேலிக்கூத்தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.
அதே போன்று தேர்தல் தொடர்பான முன்கூட்டிய ஆயத்த நடவடிக்கைளுக்காக தற்போதைக்கு 500 மில்லியன் வரை செலவிடப்பட்டுள்ளது. அதற்கு மேலாக கட்சிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் செலவிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பொதுமக்களின் பணமாகும். தேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் இந்தளவு பெருந்தொகை பணத்தை வீணாக செலவழிக்க இடமளித்திருக்கக் கூடாது. அவ்வாறு வீணாக செலவழிந்த பணத்துக்கு யார் இப்போது பொறுப்பேற்பார்கள் என்றும் பெப்ரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
