நீதித்துறையை அச்சுறுத்த நாடாளுமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்! இம்தியாஸ்
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்க நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திரமாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை மிரட்டுவதற்கு நாடாளுமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நீதித்துறைக்கு எதிராக நாடாளுமன்றத்தை நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தி மேற்கொள்ளும் விளையாட்டா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதித்துறைக்கு அச்சுறுத்தல்
சுதந்திரமான தீர்மானங்களை வழங்கும் நீதிபதிகளை அச்சுறுத்துவதற்கு நாடாளுமன்றத்தை ஆயுதமாக பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த செயற்பாடு எவ்வாறு ஆரம்பமானது என்பது யாருக்கும் தெரியாது எனவும், இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் குறிப்பிட்டுள்ளார்.
அழுகிப்போன அரசியலை மாற்றக்கோரி நாட்டு மக்கள் வீதியில் இறங்கியதாகத் தெரிவித்த பாக்கீர் மாக்கார், அழுகிப்போன அரசியலில் மயங்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள் தமது பிழைப்பைப் பற்றி மட்டும் சிந்திக்கும் நிலை மாற வேண்டும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam