விவசாயிகளுக்கு நனோ நைட்ரஜன் திரவ பசளை அறிமுகம்!
மட்டக்களப்பு வாழைச்சேனை கமநலசேவை பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு நனோ நைட்ரஜன் திரவப் பசளை தொடர்பில் இந்திய பிரதிநிதிகள் விளக்கம் அளிக்கும் நிகழ்வு வாழைசேனை கமநல சேவை திணைக்களத்தில் நடைபெற்றது.
கமநலசேவை பெரும்பாக உத்தியோகஸ்த்தர் எம்.ஏ.ரசீட் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஜ.எவ்.எவ்.சீ.ஓ. இந்திய நிறுவனத்தின் விவசாய சேவைப்பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ரெருண்டு சிங் மற்றும் குறித்த நிறுவணத்தின் இந்திய பிரதிநிதிகள் இவ் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு பற்றியிருந்தனர்.
இதனையடுத்து வாழைச்சேனை கமநல சேவை பிரிவிற்குட்பட்ட அடம்படி வட்டவான் வயல் பிரதேசத்தில் நனோ நைட்ரஜன் திரவப் பசளை விசிறல் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது. இதன்போது விவசாயிகளுக்கு நனோ நைட்ரஜன் தொடர்பில் விளக்கமளிக்கப்ட்டது. அதில், இவ் நனோ நைட்ரஜன் வயல் வெளியில் விசிறும்போது பாதுகாப்பு அங்கி பயன்படுத்த தேவையில்லை என்றும் காற்றில் வேகம் அதிகரிக்கும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பாதுகாப்பானது என்றும் விளக்கமளிக்கட்டது.
மேலும் இதற்கான விலை விபரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்தியாவில் 14 விவசாய ஆரய்ச்சி பல்கலைக் கழகங்கள், 14 ஆயிரம் விவசாயிகள்
மத்தியிலும் 94 வகையான பயிர் வகைகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதிக
விளைச்சலை பெற்றுக்கொண்டதாகவும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்றும்
விளக்கமளிக்கப்பட்டது.





உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
