நடுவீதியில் திடீரென கழன்று ஓடிய பேருந்து சில்லு! சாரதியின் சாதுரியத்தால் காப்பாற்றப்பட்ட பயணிகள்
நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்கச் சில்லு பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பிற்பகல் நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியுள்ளது.
இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.