இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா? பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
இலங்கையில் தற்போது போதமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டபிள்யு.டபிள்யு.டீ.சுமித் விஜேசிங்க கருத்து வெளியிடுகையில்,
நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. தற்போதும் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. டொலர் நெருக்கடி காணப்படுகின்ற போதிலும், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உரிய காலத்தில் அவ்வப்போது தேவையான எரிபொருள் இறக்குமதி செய்யப்படும். எரிபொருளை இறக்குமதி செய்வதில் எவ்வித சிக்கலும் இல்லை.
எனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக தகவல் வெளியாகியிருந்தால், அவை உண்மைக்கு புறம்பானவையாகும். மக்கள் இது குறித்து வீண் அச்சமடையத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.