எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தற்போது சரிந்துள்ள போதிலும், நாட்டில் தற்போதைய எரிபொருள் விலைகளை அந்த விலைகளுக்கு ஏற்ப குறைக்க வாய்ப்பில்லை என தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலையை விளக்குவதற்காக, இன்று (17) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள்
நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள், முன்னர் அதிக விலைக்கு வாங்கப்பட்டதால், அந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் கையிருப்பு தீரும் வரை நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க இயலாது என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் பயன்படுத்தப்பட்ட பின்னரே விலை குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"கடந்த மாதங்களில் வாங்கப்பட்டவற்றையே நாம் எதிர்காலத்தில் வாங்க வேண்டியிருக்கும். அதற்கேற்ப விலைகள் தீர்மானிக்கப்படும். அதிக விலைக்கு வாங்கியவற்றை எதிர்காலத்தில் நாம் பயன்படுத்த வேண்டியிருக்கும். குறைந்த விலைக்கு வாங்கியவற்றையும் எதிர்காலத்தில் நாம் பெற வேண்டியிருக்கும். இதற்குச் சிறிது காலம் ஆகும். இருப்பினும், விலைகள் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதன்படி, தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்காமல், எதிர்காலத்தில் அதே விலைகளை தக்கவைப்பது அல்லது விலைகளை குறைப்பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri