மியன்மாரின் ஆறு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை
மியன்மார் நாட்டின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த நிலையில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 12 இலங்கை மீனவர்களை மியன்மார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
குறுகிய கால விடுமுறையில் இலங்கை வந்துள்ள மியன்மாருக்கான இலங்கையின் தூதுவர் பேராசிரியர் நளிந்த சில்வா, மியன்மார் அரசங்கம் இலங்கை மீனவர்களை விடுதலை செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் மியன்மாரில் உள்ள இலங்கை நடவடிக்கை அதிகாரியின் பொறுப்பின் கீழ் உள்ளனர்.
அவர்கள் இலங்கை திரும்ப மியன்மார் அரசின் உத்தியோகபூர்வ நாடு கடத்தல் உத்தரவும் பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு அரசாங்கம் மியன்மார் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.