பொதுமக்களை தொடர்ந்தும் வருத்த வேண்டாம்! ஆட்சியாளர்களிடம் சஜித் வேண்டுகோள்
பிரச்சினைகளினால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பொதுமக்களை இனியும் வருத்த வேண்டாம் என்று சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு-07ல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச,
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும்
இருபத்தி நான்கு மணிநேரமும் வரிசைகளில் காத்திருந்து சிரமப்படும் பொதுமக்களின் சிரமங்களை புரிந்துகொள்ளாத இந்த ஆட்சி உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

20 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் நெருக்கடிகளை தீர்க்க வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான இந்த அரசாங்கம் தொடர்ந்தும் தங்கள் இயலாமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.
எனவே இவர்கள் உண்மையான மக்களின் வரம் பெற்ற ஆட்சியொன்று விரைவில் உருவாகக்கூடிய வகையில் தேர்தலொன்றுக்கு வழிவிட்டு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri