ஞானாக்காவாக மாறி ராஜபக்ச அரசை பாதுகாக்கும் ரணில்: சிவசக்தி ஆனந்தன்

Anuradha Vavuniya Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka
By Shan Jun 19, 2022 07:58 PM GMT
Report

அனுராதபுரம் சோதிடர் ஞானாக்காவின் வேலையையே தற்போது ரணில் செய்து வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பத்மநாபாவின் 32 ஆவது நினைவு தினமும் தியாகிகள் தினமும் இன்று வவுனியாவில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என கூறி பல பில்லியன் கணக்கான நிதியை வெளிநாடுகளில் இருந்து கடனாக பெற்றதன் விளைவே இன்று நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு சாதகமாக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதில் தமிழ் கட்சிகளுக்கிடையில் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளது.

இலங்கைக்கு இந்தியா நிபந்தனை இன்றி கடன் வழங்க கூடாது 

பொருளாதார நெருக்கடியான நிலையில் நாம் சாப்பாட்டு பிரச்சினையை மாத்திரமே கதைக்க வேண்டும். அரசியல் பிரச்சினைகளை பற்றி பேச இது சந்தர்ப்பம் இல்லை என சிலர் கூறுகின்றனர்.

இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 20 இற்கும் மேற்பட்ட நாடுகளிடம் ஆயுதத்தினை கொள்வனவு செய்து யுத்தத்தினை செய்து முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தினை நிலைநாட்டவுள்ளதாக கூறினார்கள்.

ஆனால் இன்று யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளாகியும் 13 ஆவது திருத்த சட்டத்தில் உள்ள மாகாணசபையை கூட நடத்த முடியாதுள்ளது. இந்த நிலையில் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல சர்வதேச நாடுகள் முன்வந்தாலும் கூட இலங்கை எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. இந்தியா உதவிகளை வழங்கி வருகின்றது.

எனவே இந்த சூழலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் வலியுத்த வேண்டிய விடயம் இலங்கைக்கு வழங்கும் ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட நிபந்தனை இன்றி வழங்க கூடாது என்பதே.

இந்த நிலையில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு மேசையில் இருந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியை எவ்வாறு நாம் கையாளப்போகின்றோம்.

இந்தியாவிடம் கூட்டாக கோரிக்கை

இந்தியாவிடம் எவ்வாறு கூட்டாக கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என எந்தவித பேச்சுக்களையும் நடத்தவில்லை. இன்று ராஜபக்ச குடும்பத்தினை பாதுகாக்கும் செயற்பாட்டையே ரணில் விக்ரமசிங்க செய்துகொண்டிருக்கின்றார்.

நாள் தோறும் நாட்டில் எரிபொருள் நெருக்கடி, அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு பஞ்சம் வரப்போகின்றது என, அனுராதபுரத்தில் இருந்க்கும் மகிந்த கோட்டாபயவுக்கு வேண்டிய ஞானாக்கா சோதிடம் கூறினாரோ அதேபோன்ற தான் ஆருடம் கூறும் வேலையையே ரணிலும்,கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினை பாதுகாக்கும் வேலையை செய்துகொண்டிருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் 32வது தியாகிகள் தினம் வவுனியாவில் அமைந்துள்ள முன்னணியின் காரியாலயத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் கே.அருந்தவராஜாதலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை தலைவர் இ.கௌதமன், ,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா,மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US