நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் தாக்கம் இலங்கையை பாதிக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு இந்தியா அறிவிக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
உலகில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் படி, அஹவால் நாளில் பூகம்பம் ஏற்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்றும், ஜப்பான், துருக்கி அல்லது உயர் தொழில்நுட்பம் கொண்ட பிற நாடுகளால் நிலநடுக்கம் ஏற்படும் திகதியை அறிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நில அதிர்வுப்பதிவேடுகள்
நாட்டில் வலுவான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைப் பார்க்கும்போது, ரிக்டர் அளவுகோலில் இது மூன்று மற்றும் ஐந்து பத்தில் குறைவானது என்றும், அந்த நிலநடுக்கங்கள் பல்லேகல, புத்தங்கல, ஹக்மன, மஹகனதரவ ஆகிய நில அதிர்வுப் பதிவேடுகளில் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
