வீதிகளில் பதிவாகும் மரணங்கள்! தீவிரமடையும் நிலை - அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தனியார் பேருந்து போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைய ஆரம்பித்துள்ளதுடன், நெருக்கடி நிலை நீடிக்குமாக இருந்தால் எதிர்வரும் நாட்களில் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் இருந்து விலகும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிக்கும் நிலைக்கு செல்லும் என அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ள அதேவேளை போதுமான பெற்றோல் கிடைக்காமையினால் முச்சக்கரவண்டி சாரதிகளும் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் உணவு விநியோக சேவைகளும் பெரிதும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இதேவேளை எரிபொருளுக்காக வீதிகளில் காத்திருக்கும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதுடன், மரணங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்