நாட்டில் தற்போது பரவியுள்ள வைரஸ் தொடர்பில் - அமைச்சர் கெஹலிய
நாட்டின் கோவிட் சூழ்நிலை குறித்து திருப்தி தெரிவிக்க முடியாது. எனவே பொதுமக்கள் கோவிட் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்கள் மத்தியில் மேலும் உரையாற்றிய அவர்,
இந்த நீண்ட வார இறுதியில் மிக அத்தியாவசிய நோக்கங்களைத் தவிர்த்து, இடங்களுக்கான போக்குவரத்துக்களை குறைக்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வார இறுதியில் புத்தாண்டு தொடர்பான கொண்டாட்டங்கள் அவசியமில்லை. எனவே பொது மக்கள் தங்கள் வருகையை மட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் தற்போது பரவியுள்ள கோவிட் மாறுபாடு முன்பிருந்த மாறுபாடு அல்ல. இந்த வைரஸ் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிறழ்வைப் பெறுகிறது என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அடிப்படை சுகாதார
வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.