அடுத்த மூன்று வாரங்களில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் - மருத்துவ சங்கம் எச்சரிக்கை
அடுத்த மூன்று வாரங்களில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என்று இலங்கை மருத்துவ சங்கம் பொது மக்களுக்கு இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர்; வைத்திய கலாநிதி பத்மா குணரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் நோயைத் தவிர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
கோவிட் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஆய்வக அமைப்பு அறிக்கைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதையும் மருத்துவர்கள் கவனித்துள்ளனர். கொழும்பு மாநகர பிரதேசத்தில் கண்டறியப்பட்ட எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று பத்மா குணரத்ன கோடிட்டு காட்டினார்.
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் குழந்தைகளிடையே கோவிட் தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதைக் கவனித்ததாக அவர் கூறியுள்ளார்.
பூர்வாங்க ஆய்வக ஆய்வுகளைத் தொடர்ந்து விரைவான பரிமாற்றத்துடன் கூடிய புதிய கோவிட் மாறுபாட்டின் இருப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இது இலங்கையில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டின் புதிய பிறழ்வு அல்லது மற்றொரு வெளிநாட்டிலிருந்து புதிதாக தோன்றிய ஒரு வைரஸ் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, ஒவ்வொரு குடிமகனும் மூன்றாவது அலையின் பேரழிவு விளைவுகளைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும் என்றும் வைத்திய கலாநிதி குணரத்ன வலியுறுத்தினார்.
கோவிட் டின் புதிய மாறுபாடு வயதானவர்களை விட இளைய மக்களை பாதிக்கக்கூடும்
என்றும் வைத்திய கலாநிதி பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
