சுற்றுலா பயணிகளுக்கான கோவிட் விதிமுறைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான கோவிட் விதிமுறைகள் தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கோவிட் விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என அந்த சபை தெரிவித்துள்ளது.
கோவிட் விதிமுறைகள்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, சுகாதார அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத் துறை நிறுவனங்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கடந்த 17ஆம் திகதி திட்டமிட்டிருந்த நிலையில் பின்னர் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதற்கமைய,இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான கோவிட் விதிமுறைகள் தொடர்பில் புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.