இலங்கையை இரண்டு வருடங்களில் அபிவிருத்தியடைந்த தேசமாக மாற்ற முடியும்! ரணில் உறுதி
சீனா உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகள் போன்று வலுவான மாற்றமில்லாத தேசிய கொள்கையை உருவாக்கினால், இரண்டு வருடங்களில் இலங்கையை அபிவிருத்தியடைந்த தேசமாக மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான திட்டத்திற்கு அமைய செயற்பட்டால், 20 வருடங்களுக்குள் இலங்கை தனிநபர் வருமானத்தை நான்கு மடங்காக அதிகரிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் 115 வது ஜனன தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி நடத்தும் இணையத்தள மாநாட்டு தொடரின் ஆரம்ப மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.