வண்ணாத்திவில்லு வெடிபொருள் களஞ்சிய விவகாரம் - 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
புத்தளம் மேல் நீதிமன்றில் ஆறு சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கடந்த 2019 ஜனவரி மாதம் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராகவே இவ்வாறு குற்றப்பத்திரத்தை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.
முஹம்மது முஃபீஸ், முகமது ஹமாஸ், இப்ராஹிம் முகமது நௌபர், முகமது சஜித், இப்ராஹிம் சதீக் அப்துல்லா, மற்றும் கஃபூர் ஆகியோருடன் இறந்த சஹ்ரான் ஹசிம் மற்றும் முகமது ஹஸ்தூன் ஆகியோரை விசாரிக்குமாறு அவர் மன்றில் கோரியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத நிதியியல் சட்டம் ஆகியவற்றின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.