வாழைச்சேனையில் ஏற்பட்ட விபத்தினால் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று (2023-03-10) மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை வீதி விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கோ.முருகன் வயது (52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி மரணம்
உறவினர் ஒருவரின் மரண வீட்டில் கலந்து கொண்டவர்களுக்காக மதிய உணவினை கடையில் கொள்வனவு செய்யும் முகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவேளை பின்னால் வந்த வட்டா என அழைக்கப்படும் வாகனமொன்று மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த அவரை அருகில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றும் வாகனத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற பதில் நீதிபதி எம்.தயாபரன் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான கட்டளையினை பொலிஸாருக்கு பணித்தார்.
பின்னர் விபத்திற்குள்ளான வட்டா வகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு News Lankasri

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri
