இலங்கை திவால் நிலைக்குச் சென்றால்? 43வது படையணியின் எச்சரிக்கை!
இலங்கை தற்போதைய நிலையில், வங்குரோத்து நிலைக்கு சென்றால், நாட்டை கட்டியெழுப்ப 7 அல்லது 8 ஆண்டுகள் தேவைப்படும் என்று 43 வது படையணி தெரிவித்துள்ளது.
43வது படையணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு கிரீஸ் அரசாங்கம் பொருளார வீழ்ச்சியை கண்டநிலையில் இன்னும் அங்கு உயர்ச்சி ஏற்படவில்லை.
லெபானான் நாட்டில் வங்குரோத்து நிலை ஏற்படுமானால், அதனை மீளமைக்க 7 முதல் 10 ஆண்டுகள் தேவை என்று எதிர்வுகூறப்பட்டுள்ளதாக ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சுனாமியின் பின்னரே அல்லது போரின் பின்னரே இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது போன்று வங்குரோத்து ஏற்பட்டால் மீட்டெடுக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.