இலங்கைக்கு முதன்முறையாக “எயாா் பிரான்ஸ்“ விமானச்சேவை. “சுவிஸ் எயார்“ சேவையும் ஆரம்பம்
சுமாா் 30 வருடங்களுக்கு பின்னா், இலங்கைக்கு முதல் தடவையாக “எயாா் பிரான்ஸ்“ நேரடிப் பயணிகள் விமானச் சேவை இன்று ஆரம்பமாகிறது.
முதல் சேவையை மேற்கொள்ளும் விமானம் இன்று பிற்பகல் 1.25க்கு இலங்கையை வந்தடையவுள்ளது.
அதேநேரம் கட்டுநாயக்கவில் இருந்தும் பாாிஸூக்கான முதல் விமானம் இன்று புறப்படவுள்ளது.
வாரத்துக்கு மூன்று தடவைகள் இந்த சேவை கொழும்புக்கும் பாரிஸூக்கும் இடையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனாத் பெருந்தொற்றுக்கு பின்னா் சுவிஸ்எயாா் இன்று தமது சேவையை கொழும்புக்கு ஆரம்பித்துள்ளது. இதன்படி சூாிச்சில் இருந்து முதல் விமானம் இன்று காலை கட்டுநாயக்கவையை வந்தடைந்தது,
8023 கிலோமீற்றா் துாரத்தைக்கொண்ட இந்தப்பயணத்துக்கு 9 மணித்தியாலம் 56 நிமிடங்கள் செல்வதாக இலங்கையின் சுறறுலாத்துறை அமைச்சு தொிவித்துள்ளது.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam