இலங்கைக்கு முதன்முறையாக “எயாா் பிரான்ஸ்“ விமானச்சேவை. “சுவிஸ் எயார்“ சேவையும் ஆரம்பம்
சுமாா் 30 வருடங்களுக்கு பின்னா், இலங்கைக்கு முதல் தடவையாக “எயாா் பிரான்ஸ்“ நேரடிப் பயணிகள் விமானச் சேவை இன்று ஆரம்பமாகிறது.
முதல் சேவையை மேற்கொள்ளும் விமானம் இன்று பிற்பகல் 1.25க்கு இலங்கையை வந்தடையவுள்ளது.
அதேநேரம் கட்டுநாயக்கவில் இருந்தும் பாாிஸூக்கான முதல் விமானம் இன்று புறப்படவுள்ளது.
வாரத்துக்கு மூன்று தடவைகள் இந்த சேவை கொழும்புக்கும் பாரிஸூக்கும் இடையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனாத் பெருந்தொற்றுக்கு பின்னா் சுவிஸ்எயாா் இன்று தமது சேவையை கொழும்புக்கு ஆரம்பித்துள்ளது. இதன்படி சூாிச்சில் இருந்து முதல் விமானம் இன்று காலை கட்டுநாயக்கவையை வந்தடைந்தது,
8023 கிலோமீற்றா் துாரத்தைக்கொண்ட இந்தப்பயணத்துக்கு 9 மணித்தியாலம் 56 நிமிடங்கள் செல்வதாக இலங்கையின் சுறறுலாத்துறை அமைச்சு தொிவித்துள்ளது.
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri