தோல்விக்கு மேல் தோல்வி: உண்மையை புரிந்து கொள்ளாத ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ, அவரது ஆலோசகர்களோ, புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளோ, கடந்த காலங்களில் பல தடவைகள் தோல்வியடைந்தாலும், நாட்டில் நடக்கும் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை என்று விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இவையே கோட்டாபய அரசாங்கத்துக்கு முடிவில்லாத தவறுகளுக்கு வழியை ஏற்படுத்தின என்று ஆங்கில இதழ் ஒன்று கூறுகிறது.
அவசர நிலைப் பிரகடனம், 36 மணி நேர ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு முழுத் தடை விதித்தல், ஆகிய நடவடிக்கைகள் இதில் அடங்குகின்றன.
உளவுத்துறையின் தோல்வியானது, ஜனாதிபதி ராஜபக்சவின் மிரிஹான தனியார் இல்லத்திற்கு வெளியே சம்பவங்களுக்கு வழிவகுத்தது.
இலங்கையின் வரலாற்றில் ஒரு காலத்தில் சிறப்பாக செயற்பட்ட மிரிஹான காவல்துறை இந்த விடயத்தில் தோல்வியடைந்தது.
இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியான கோத்தபய ராஜபக்ச வீரராக இருந்த வரலாறு இப்போது கீழ்நோக்கி சரிந்துள்ளது.
அவர் மிரிஹானவில் உள்ள தனது தனிப்பட்ட குடியிருப்பில் வசிப்பதை கைவிட்டு மாற்று இடத்திற்கு செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. மார்ச் 17 அன்று நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையைத் தவிர, அவரின் கருத்துக்கள் மக்களுக்கு செல்லவில்லை.
அவர் பொது ஈடுபாடுகளைத் தவிர்த்தார். அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
உலகத் தலைநகரங்களில் வாழும் இலங்கையர்கள் அவருக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர்
மறுபுறத்தில் பல மேற்கத்திய அரசாங்கங்கள் இலங்கையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன,
எதிர்வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வு வரும்போது வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிநாடுகளின் அதிகமான ஆதரவை எதிர்பார்க்கமுயாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய நிதியமைச்சுக்கு உள்ளேயும் வெளியேயும் பசில் ராஜபக்சவின் செயற்பாடுகளில் திருப்தி கொண்டிருக்கவில்லை என்று ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
திறைசேறியின் செயலாளர் ஆர்டிக்கல மாத்திரமே தம்முடன் வோசிங்டன் வந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளமுடியும் என்று அவர் வலியுறுத்தியிருந்த விடயத்தையும் கோட்டாபய விரும்பவில்லை என்று ஆங்கில இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது

36 வருடத்தை எட்டியுள்ள கரகாட்டக்காரன் திரைப்படம்... படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
