தமிழ்-முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படாது என்று அரசாங்கம் அறிவிப்பு
இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்கள், நவீன தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதாக இலங்கை, இஸ்லாமிய நாடுகளிடம் தெரிவித்துள்ளது..
உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று மத நம்பிக்கைகளின் பெயரால் தீவிரவாதக் குழுக்கள், இலங்கையில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளின் தூதரக பொறுப்பாளர்களை வெளியுறவு அமைச்சர் திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தார்
இதன்போது இலங்கை முஸ்லிம், கண்டி மற்றும் தமிழ் சமூகங்களுக்கான தனிப்பட்ட சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படாது என்று அமைச்சர் உறுதியளித்தார்.