சிறீதரன் எம்பியின் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள்
அடையாளம் தெரியாத நபர்களினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அச்சுறுத்தும் வகையிலான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள சிறீதரனின், இல்லத்தின் முன்பாக அடையாளம் தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் இன்றையதினம் (28) அவதானிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல்
இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள் அணிந்தவாறு வருகைதந்த அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என்பதை, கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |