பருத்தித்துறையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு
யாழ்ப்பாணம் - வடமராட்சி,பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முச்சக்கர வண்டிகளுக்கு இன்று ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிசியந்த அமரசிங்க தலைமையில் காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது.

முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்
இதில் பிரதம விருந்தினராக பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் Gws சந்தண ஜெயதிலக,பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு அகன்று செல் எனும் அரசாங்கத்தின் அறிவித்தல் ஸ்ரிக்கரை ஒட்டிவைத்ததுடன் மது ஒழிப்பு மற்றும குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள்,பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri