இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படத்தின் நடிகர் இயற்கை எய்தினார்
இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படமான வெண் சங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்த மூத்த கலைஞர் சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.
யாழ். கந்தர்மடத்தில் உள்ள இல்லத்தில் வைத்து வயது மூப்பு காரணமாக நேற்றையதினம் (24.05.2023) அவர் இயற்கை எய்தியுள்ளார்.
இலங்கை தமிழ் திரையுலகில் ஒரு புதிய அத்திவாரம்
இவர் 26.10.1936ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை- சித்தங்கேணியில் பிறந்து யாழ்ப்பாணம் - கந்தர்மடத்தடியில் வசித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது திரையுலக பயணம் இலங்கை தமிழ் திரையுலகில் ஒரு புதிய அத்திவாரமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |