தொடருந்தில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு: பொலிஸார் வெளியிட்டுள்ள காரணம்
கொழும்பு - வெயாங்கொட பிரதேசத்தில் இரு இளைஞர்கள் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் காலை (25.05.2023) இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வெயாங்கொட வதுருவ பிரதேசத்தில் வசிக்கும் கவிஷ்க லக்மால் என்ற 18 வயது இளைஞனும், எஸ்.ஏ.திவங்க என்ற 19 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தொலைபேசி அழைப்பில்
உயிரிழந்த இரு இளைஞர்களின் வீடுகளும் தொடருந்தில் பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
இன்றைய தினம் காலை சுற்றுலா செல்ல திட்டமிட்டு வதுரவ தொடருந்தில் நிலையத்தை நோக்கி தொடருந்தில் பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர்.
மேலும் இருவரும் தொலைபேசியில் உரையாடி கொண்டு தொடருந்து கடவையில் நடந்து சென்றுள்ளனர்.
இதன்போது, பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த விரைவு தொடருந்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 5 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
