நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்! வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் பலர் குடும்பமாக படகுகள் மூலம் தமிழகம் சென்று வருகின்றனர்.
அதேபோன்று மற்றொரு தரப்பினரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் வேலை வாய்ப்பு மற்றும் பிறதேவைகளுக்காக சட்டரீதியாக நாட்டிலிருந்து வெளியேறும் நிலைமை அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு,