வெளிநாட்டிற்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் 2,064 பேர் தென் கொரியாவிற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, உற்பத்தித் துறை தொடர்பான வேலைகளுக்காக 1708 பேரும், மீன்பிடித் துறைக்கு 351 பேரும், கட்டுமானத் துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.
தென்கொரியாவில் தொழில் வாய்ப்பு
அவர்களில் 1,892 பேர் முதல் முறையாக தென் கொரியாவில் வேலைக்காக புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் 41 யுவதிகளும் தென்கொரியாவிற்கு தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
