ரஷ்ய - உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையர்களை மீட்க ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை
மியன்மாரில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையர்களை மீட்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இராஜத்தந்திரமட்ட பணியை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) வழிகாட்டலிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மியன்மார் மற்றும் ரஷ்யாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
நாட்டின் இளம் தலைமுறையினரையும், ஓய்வு பெற்ற இராணுவத்தினரையும் பாதுகாக்கும் நோக்கின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி இந்நடவடிக்கையினை முன்னெடுத்து வந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்
குறித்த குழுவினர், இலங்கையின் மஹாநாயக்க தேரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கையெழுத்திட்டுள்ள ஆவணத்தையும் அந்நாடுகளுக்கு கையளிக்கவுள்ளனர்.
இந்தக் குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜே.சி அலவத்துவல (Jc alavathuwala), சுஜித் சஞ்சய் பெரேரா(Sujith sanjay pererah), காவிந்த ஜயவர்தன(Kaavinda jayawardane), வசந்த யாப்ப பண்டார(wasandha yapa bandaara) உள்ளிட்டோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 19 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
