சிம்பாப்வேயில் சிக்கிக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
சிம்பாப்வே நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் சென்றுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக சிம்பாப்வே உட்பட சில ஆபிரிக்க நாடுகளின் பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம்.
இந்த நிலைமையில், இலங்கை கிரிக்கெட் அணியை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமான உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சுகாதார அமைச்சுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள Omicron என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள தென் ஆபிரிக்கா, அங்கோலா, போஸ்வானா, மொசாம்பிக், லசதோ, சிம்பாப்வே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கைக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri