மலேசியாவில் உயிரிழந்த இலங்கை பெண் - மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சகோதரி
மலேசியாவில் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் அங்கு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். எனினும் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் என அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பேருவளை, கல்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். கடந்த ஒக்ஸ்ட் மாதம் 24ஆம் திகதி இந்த பெண் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டில் அறிவிக்ககப்பட்டுள்ளது.
எனினும் தனது சகோதரின் மரணத்தில் சந்தேகம் என்பதனால் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது சகோதரி இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.