ஜப்பான் தடுப்பு காவலில் உயிரிழந்த மாணவி! அறிக்கை கோரும் இலங்கை வெளிவிவகார அமைச்சு
ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த இலங்கை மாணவி விஷ்மா சந்தமாலி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையரான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி (வயது 33) ஒரு மாணவியாக 2017இல் ஜப்பானுக்கு சென்றுள்ளார்.

விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கிய மாணவி
இந்நிலையில் அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
அங்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவால் அவதியுற்ற அவர் 2021 மார்ச் 6ஆம் திகதி ஜப்பானின் நகோயாவில் உள்ள தடுப்பு மையத்தில் உயிரிழந்தார்.
விஷ்மா சந்தமாலியின் உடல்நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினாலும், விஷ்மா சந்தமாலி உடல்நிலை மோசமானதால் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

வெளியான சிசிடிவி காணொளி
அதன்படி, உயிரிழந்த சண்டமாலியின் பாட்டி இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்தார்.
விஷ்மா சந்தமாலியின் கடைசி சில நாட்களைக் காட்டும் சிசிடிவி வீடியோவை அவரது வழக்கறிஞர்கள் சமீபத்தில் வெளியிட்டனர்,
இது அங்கீகரிக்கப்படாத வீடியோ என்று ஜப்பானிய நீதித்துறை அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலே ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri