காம்பியா தேர்தல்களில் கண்காணிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்
காம்பியா தேர்தல்களில் கண்காணிப்புப் பணிகளுக்காக இலங்கைப் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மனித உரிமை சட்டத்தரணி சியமலா கோமஸ் இவ்வாறு தேர்தல் கண்காணிப்பு பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி காம்பியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பு குழு கண்காணிப்பு செய்ய உள்ளது.
நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஒலுசிகொன் ஒபாசான்ஜோ இந்த கண்காணிப்பு குழுவின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
காம்பிய சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் பொதுநலவாய நாடுகள் காண்காணிப்பு குழு கடமையில் ஈடுபட உள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி சியாமலா உள்ளிட்ட ஒன்பது பேர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
