ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்! - இரு நாடுகளும் விவாதம்
ஜப்பானில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஒருவரின் மரணம் குறித்து இலங்கையும், ஜப்பானும் விவாதித்துள்ளன.
வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும், ஜப்பானிய தூதர் அகிரா சுகியாமாவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது 33 வயதான இலங்கை பெண்ணே ஜப்பானில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இந்த மாத ஆரம்பத்தில் மரணமானார்.
வீசா அனுமதியில் பிரச்சனை காரணமாகவே அவர் ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கடுமையான மன அழுத்தம் மற்றும் உடல்நலம் மோசமடைந்ததால்அவரால் சாப்பிடவும் நடக்கவும் முடியவில்லை. இதனையடுத்தே அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஜப்பானிய காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
