இலங்கையிலுள்ள நியூசிலாந்து பிரஜைகள் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நபர்
நியூசிலாந்து சுப்பர் மார்க்கெட் வளாகத்தில் 6 பேர் மீது கத்துக்குத்து தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மொஹமட் சம்சுதின் என்ற 32 வயதுடைய இலங்கையர், இலங்கைக்கு வருகைத்தந்து தாக்குதல் மேற்கொள்ளவிருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் நியூசிலாந்து நாட்டவர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார் என நியூசிலாந்து புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக இந்த திட்டம் தொடர்பில் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நியூசிலாந்து நாட்டவர்களுக்கு பாடம் ஒன்றை கற்பிக்க அவ்வாறு செய்ய வேண்டும் என்ற பயங்கரவாத மனநிலைமையுடன் அவர் இருந்தார் என அவரது கருத்துக்களில் உறுதியாகியுள்ளது. அவருக்கு நெருக்கமான பலர் நியூசிலாந்து அல்லது இலங்கையில் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
you may like this video
