அந்த துரோகங்களுக்கு நாங்கள் பங்காளிகள் இல்லை - தமிழ்க் கட்சிகளை கடுமையாக சாடிய கஜேந்திரகுமார்
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை சிதைத்து, காலத்திற்கு காலம் பேரினவாத அரசாங்கங்களுடன் இணக்க அரசியல் நடத்தும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் வரலாற்றுத் துரோகங்களுக்குத் தங்கள் கட்சி ஒருபோதும் பங்காளியாக இருக்காது என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (TNPF) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் சிலர் தங்களின் சுயநலப் போக்குகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் தமிழ் தேசியக் கொள்கைகளை அடகு வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் இரகசியத் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்தார்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதிக்கான பயணத்தில் தமது தரப்பு என்றும் சமரசமின்றித் தனித்துவமாக இயங்கும் என்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam