அந்த துரோகங்களுக்கு நாங்கள் பங்காளிகள் இல்லை - தமிழ்க் கட்சிகளை கடுமையாக சாடிய கஜேந்திரகுமார்
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை சிதைத்து, காலத்திற்கு காலம் பேரினவாத அரசாங்கங்களுடன் இணக்க அரசியல் நடத்தும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் வரலாற்றுத் துரோகங்களுக்குத் தங்கள் கட்சி ஒருபோதும் பங்காளியாக இருக்காது என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (TNPF) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் சிலர் தங்களின் சுயநலப் போக்குகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் தமிழ் தேசியக் கொள்கைகளை அடகு வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் இரகசியத் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்தார்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதிக்கான பயணத்தில் தமது தரப்பு என்றும் சமரசமின்றித் தனித்துவமாக இயங்கும் என்றும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri