இலங்கை தமிழர்கள் ஸ்டாலினை கடவுளாக பார்க்கிறார்கள்: - அமைச்சர் துரைமுருகன்
இலங்கை தமிழர்கள் ஸ்டாலினை கடவுளாக பார்க்கிறார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலுார் மாவட்டம், மேல்மொணவூரில் இலங்கை முகாமில் வசிக்கும் தமிழர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது,
பாலாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நல்ல ஆட்சியில் நாடு செழிக்கிறது. 6 மாத ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளார்.
அரசு திட்டங்களை தீட்டி முடிவுகள் எடுப்பதில் மற்ற மாநில முதல்வர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறார். ஸ்டாலின் போல முதல்வராக இருக்க வேண்டும் என மஹா., முதல்வர் கூறுகிறார். உள்நாடு, வெளிநாடு பத்திரிக்கைகள் புகழ்கின்றனர்.
6 மாத ஆட்சியில் எந்த தவற்றையும் சுட்டிக் காட்ட முடியாதபடி ஸ்டாலின் இருக்கிறார். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். திட்டங்களை தீட்டுவதிலும், வறுமையில் வாடும் ஏழைகளை தேடிச்சென்று உதவிகள் செய்து வருகிறார்.
நம்மை யார் காப்பாற்றுவார்கள் என ஏங்கிக் கிடந்த இலங்கை தமிழர் இதயத்தை வருடி நானிருக்கிறேன் என்று முதல்வர் கூறுகிறார்.இதனால் இலங்கை தமிழர்கள் ஸ்டாலினை கடவுளாக பார்க்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுரிமை தர தயாராக இருக்கிறோம்.
உங்களுக்காகவே நாங்கள் இருக்கிறோம். ஸ்டாலின் வந்த நேரம் வேலுார் மாவட்டத்தில், ஏரிகள் நிரம்பி வழிகிறது. வேலுாரில் நாங்கள் தஞ்சையை பார்க்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri