"ஜெயலலிதா இருந்திருந்தால் இலங்கை தமிழர் பிரச்சினை இருந்திருக்காது"
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இலங்கை தமிழர் தொடர்பான பிரச்சினைகள் இருந்திருக்காது என இந்திய தமிழ் ஊடகவியலாளர் அய்யநாதன் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“ராஜீவ் காந்தி படுகொலைக்காக, இந்திய அரசின் பழிவாங்கும் எண்ணத்தின் வெளிப்பாடே சாந்தன் விவகாரத்தின் இழுபறிக்கு காரணம் என நான் நினைக்கின்றேன்.
மக்களவைத் தேர்தல்
சாந்தனை சொந்த நாட்டிற்கு அனுப்புவது என்பது, இந்திய ஒன்றிய அரசின் அதிகாரத்துக்குட்பட்ட விடயம் என்பதாலேயே தமிழக அரசால் முன்னகர்வுகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.
அத்துடன், 2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில், திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
அதுமட்டுமன்றி, இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தொழில் மற்றும் கல்வி செயற்பாடுகளுக்கு எந்தவித தடையுமில்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்த எலக்ட்ரீஷியனின் மகள்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரி News Lankasri
