கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து! இலங்கை தமிழ் இளைஞர் பலி
கனடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம்(14.05.2023) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னணி
முல்லைத்தீவு அனிஞ்சியன்குளம் மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட 39 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
வீதியில் திடீரென பாய்ந்து ஓடிய மான் ஒன்றின் மீது வாகனம் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
மேலும் உயிரிழந்த நபர் கனடாவில் ஒன்றரை வருடங்களாக வசித்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
You may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |